புதன், 4 டிசம்பர், 2024

பிறப்புக்குழி நழுவி
வெளிவிழுந்த கணம்
கூண்டடைந்த பறவைதான்
இன்றும் வழக்கம்போல்
உடலெல்லாம்
கீறல் ஓவியமிட்டுள்ளது

ஆகாசமொளிரும் நெருப்பை
அகலில் ஏற்றி
வைத்தேன் கூண்டுக்குள்
படபடப்பு குறைந்து
சுடரின் நலுங்களில்
லயித்தது

பின் அப்பறவைதான்
காண்பித்துக்கொடுத்தது
ஆகாசத்தை பிறப்பிக்கும்
கருவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...