ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சலிக்கத் தேடிவிட்டேன்
குடுவையை
ஒன்று கூட எஞ்சவில்லை
கானகத்தின்
ஆழத்துக்குச் செல்லவேண்டும்
நிலவு ஓயாமல்
அரற்றும்
நித்யமான தனிமையில்
ஓடையில்
வானத்தின் வெளிர்
ஒழுகும் போழ்தில்
நீ அருளியது
சொல்லாக
எதிர்பாரா கணமொன்றில்
மலரும்
வானம் மட்டும்
இருக்கும்
இந்த குடுவைக்குள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...