புதன், 18 டிசம்பர், 2024

ஒன்று அசைந்தாலும்
இமை நலுங்கினாலும்
என
நிச்சலனமான
இந்த வனத்தின் இரவில்
வானத்தின் கடைசித்
துளியும் மோனித்துக்கிடக்கும்
ஏரியில்
நீர்க்கோழி
ஆகாசத்தைக் கூரிட்டு வந்து
நிச்சலனம் நீர் அருந்தும் ஒளியில்
குமிழியிட்டது
நிலவு உடைந்து துண்டாகி
அலைப்பெருக்கிற்று
அண்டத்துள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வனமெங்கும்  நிறைந்த வசந்ததின் மலர்களாய் நின்றது மென்மையாய் மிதந்து வந்து நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது அசையா வேர்களில் தியானித்திருந்த...