புதன், 18 டிசம்பர், 2024

இரவுக்குள்
குளிர் பரவுவது போல்
பிரிவு என்னை
வியாபிக்கிறது
என்றோ கண்ட
அயல்நிலத்துப் பறவையை
நினைத்துக்கொள்கிறேன்
பாதத்தை குளிராய்
அணைத்து மீண்ட
அலைகளை
நினைத்துக்கொள்கிறேன்
யாரோ வீட்டின்
ஜன்னல் கண்ணாடியில்
முகம் பார்த்தது
நினைவெழுகிறது
இந்த குளிர் மிக்க
இரவில்
குளிர்காயும்
நெருப்பின் புகையைப்போல்
நினைவுகள் எழுந்து மறைகின்றன
தீயின் ஜ்வாலைகள்
அணையும்‌ நாட்களில்
பிரிவின் துணையுமின்றி
தனித்தலையும் குளிரால்
சூழப்படுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...