சனி, 21 டிசம்பர், 2024

நீ என்
வானமாக
இருக்கிறாய்
என் வேர்கள்
இவ்விடம்தான்
மலர் சுமக்கும்
என் பிலங்களில்
குளிர் நீர்ப்பெருகப்போவது
இங்குதான்
என் விருட்சங்களில்
புள்ளரவம் ஒலிப்பது
உன்னால்தான்
மேலும்
அணுக்களுக்கிடையே
நிரந்தரமான பிரிவு
என்பது உன்
வானத்தின் கீழ்
இல்லை‌ அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் யார்?

சொல்‌ பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...