புதன், 18 டிசம்பர், 2024

எத்தனைத்
தேடிக் கண்டடைந்தேன்
தெரியுமா
உன் நதிச் சுழிப்புகளின்
ஒவ்வொரு வளைவையும்
பார்த்து பார்த்து
கண்டெடுத்தேன்
இப்பரிசினை
வலசைப்புள்
அழைத்திராவிட்டால்
வீடடைந்து
கைகளில்‌ ஏந்திக்
கொடுத்திருப்பேன்
இப்போதோ
மலை நுனி வரை சென்று
கடல் மேல் மிதந்து
புள்ளியாகக் கரையும்
புள்ளினை
பார்த்து நிற்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?