வானம் சிகையாக
இரவை சூடிநிற்கிறாய்
என் அகத்தை
உன் இரவின் ஏரிக்குள்
வீசி எறிந்தபின்
ஏரி ஆழத்து வளைக்குள் சென்று
பகலெல்லாம்
புதைந்துகொள்கிறேன்
அந்தியின் கடைசிப்புள்
அழைக்கும் போது
இரவு வான் நோக்கி
ஆழம் விட்டெழும்
குமிழியாய் அகம்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக