புதன், 18 டிசம்பர், 2024

வானம்‌‌ சிகையாக
இரவை சூடி
நிற்கிறாய்
என் அகத்தை
உன் இரவின்‌ ஏரிக்குள்
வீசி எறிந்தபின்
ஏரி ஆழத்து வளைக்குள்‌‌ சென்று
பகலெல்லாம்
புதைந்துகொள்கிறேன்
அந்தியின்‌‌ கடைசிப்புள்
அழைக்கும் போது
இரவு வான் நோக்கி
ஆழம் விட்டெழும்
குமிழியாய் அகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும்‌ பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்‌கொண்டுவிட்ட அகத்தை