வானம் சிகையாக
இரவை சூடிநிற்கிறாய்
என் அகத்தை
உன் இரவின் ஏரிக்குள்
வீசி எறிந்தபின்
ஏரி ஆழத்து வளைக்குள் சென்று
பகலெல்லாம்
புதைந்துகொள்கிறேன்
அந்தியின் கடைசிப்புள்
அழைக்கும் போது
இரவு வான் நோக்கி
ஆழம் விட்டெழும்
குமிழியாய் அகம்
இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும் பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்கொண்டுவிட்ட அகத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக