வானம் சிகையாக
இரவை சூடிநிற்கிறாய்
என் அகத்தை
உன் இரவின் ஏரிக்குள்
வீசி எறிந்தபின்
ஏரி ஆழத்து வளைக்குள் சென்று
பகலெல்லாம்
புதைந்துகொள்கிறேன்
அந்தியின் கடைசிப்புள்
அழைக்கும் போது
இரவு வான் நோக்கி
ஆழம் விட்டெழும்
குமிழியாய் அகம்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக