சஞ்சாரமில்லாத
சோலைக்குள்என் குடிலை அமைத்துக்கொண்டேன்
வந்து செல்லும்
குருவிகளுடன்
மட்டும் தான் பேச்சு
இலைகள் சொல்லும்
பாசுரங்களைக் கேட்டிருப்பது
மற்றபடி பொழுதனைவதை
பொழுதெழுவதை
பார்த்திருப்பது
முட்கள் இதென்றும் மலர்கள் இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக