ஞாயிறு, 1 டிசம்பர், 2024

நள்ளிருளில்
நிலவின் பொழிவில்
இச்சைகளின் பெருவனம்
நிலவொளியில்‌ புகைத்திரட்டாய்
அலையும் பேய்கள்
துளி சஞ்சலமுமின்று
இச்சையில் சுழலும்
உருத்தோற்றங்கள்
சதுப்பின் சேற்றுக் குழம்பலின்
ஆழத்தில் அசையும்
தினவுடல்கள்
காமத்தின் தீநா பறக்கும்
சர்ப்பமொன்றின்
மூச்சு வனத்தை அசைக்கிறது
பின் வனப்பேய்களின்
உச்சாடனத்தினுடே
எழுந்தது
மதுரமேயான ஓர் நஞ்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ ஏற்றிய அகலில் அதன் செதில் ஒளிர்கிறது ஒரு நாள் நீ இட்ட கோலத்தில் கோடுகளோடு வளைந்து கிடந்தது இமையாக் கண்களும் ஓயா துடிநாவும் என்‌ க...