ஞாயிறு, 8 டிசம்பர், 2024

யாருக்கும்
சொல்லாமல்
தேக்கிவைத்துள்ளேன்
உதயத்தின் கோடிக்கிரணங்கள்கூட காணமுடியாத
இரவின் ஆன்மத்தில்
ஒளித்துள்ளேன்
உன்‌ வானம்
ஏரியை மெல்லத் தொடுகையில்
சிகைபிடித்திழுத்து
கழுத்தறுந்து வீழ்வேன்
முற்றழிவேன்
யாருமறியாமல்

தீ ஜ்வாலையாகும்
உன் அந்திக்குள்
கரும்புள்ளியாய்
கரையும்‌ புள்
அறியும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...