வனம் சமரின் வெளி
கூர் வேட்டைக் கண்கள்காத்துள்ளன
இரைக்கு
மிறளும் கண்கள்
செவி மடுக்கின்றன
தன்னை அணுகும்
பசியின் தடமறிய
ஆனால்
தெய்வமொன்றின்
ஓயா தவம் கனிந்து
மலர்கிறது ஒரு மலர்
வனதேவதை சொன்னது
'மலரைப்பாடு
வனத்தின் புத்தன் அது'
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக