புதன், 4 டிசம்பர், 2024

வனம் சமரின் வெளி
கூர்‌ வேட்டைக் கண்கள்
காத்துள்ளன
இரைக்கு
மிறளும் கண்கள்
செவி மடுக்கின்றன
தன்னை அணுகும்
பசியின் தடமறிய
ஆனால்
தெய்வமொன்றின்
ஓயா தவம் கனிந்து
மலர்கிறது ஒரு மலர்
வனதேவதை சொன்னது
'மலரைப்பாடு
வனத்தின் புத்தன் அது'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?