ஞாயிறு, 1 டிசம்பர், 2024

இத்தனை தூரம்‌‌ பயணித்தது
இத்தனை வெற்றிகள் ஈட்டியது
இத்தனை வாதங்கள் புரிந்தது
புண்பட்டது
புண்படுத்தியது
இத்தனை சொற்களை‌ வடித்தது
வண்ண வண்ணமாய் நடித்தது
எல்லாம்‌‌எல்லாம்
நான்‌ நான் நான் என
உரக்கக் கூவத்தானா
இந்த நள்ளிரவில்
தொண்டை நரம்புகள் புடைக்க
நான் எழுப்பும் குரலுக்கு
தெருநாய் ஒன்று
ஓட்டத்தை சற்றே நிறுத்தி நோக்கி
பின் அதன்பாடுக்கு சென்றது
வேறெந்த சலனமும் இல்லை
இக்கணத்தில்‌ நிகழ்ந்துகொண்டிருக்கும்
இம்மாபெரும்‌‌ இரவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...