புதன், 4 டிசம்பர், 2024

இன்று
பறவையொலியின்றி
மழையொலியில் கண்விழித்தேன்
புலரி தன் ஒளியெல்லாம்
அடங்கி கூடொடுங்கியிருந்தது
கதவிடுக்குவழி
வானம் குடிலுக்குள்
எட்டிப்பார்த்திருந்தது
எல்லா பொழுதுக்கும்
ஒரே அகலை ஏற்றிவிட்டு
ஒரே ஒளியில்
ஒரே ஒலியில்
பொழுது கரைவதை
பார்த்துக்கொண்டிருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?