புதன், 4 டிசம்பர், 2024

இன்று
பறவையொலியின்றி
மழையொலியில் கண்விழித்தேன்
புலரி தன் ஒளியெல்லாம்
அடங்கி கூடொடுங்கியிருந்தது
கதவிடுக்குவழி
வானம் குடிலுக்குள்
எட்டிப்பார்த்திருந்தது
எல்லா பொழுதுக்கும்
ஒரே அகலை ஏற்றிவிட்டு
ஒரே ஒளியில்
ஒரே ஒலியில்
பொழுது கரைவதை
பார்த்துக்கொண்டிருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...