புதன், 4 டிசம்பர், 2024

இன்று
பறவையொலியின்றி
மழையொலியில் கண்விழித்தேன்
புலரி தன் ஒளியெல்லாம்
அடங்கி கூடொடுங்கியிருந்தது
கதவிடுக்குவழி
வானம் குடிலுக்குள்
எட்டிப்பார்த்திருந்தது
எல்லா பொழுதுக்கும்
ஒரே அகலை ஏற்றிவிட்டு
ஒரே ஒளியில்
ஒரே ஒலியில்
பொழுது கரைவதை
பார்த்துக்கொண்டிருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...