இப்பெருக்கு
எப்போதுஓயப்போகிறது
ஒரு இடறலில்
வானம் எப்படி
திறந்துகொண்டது
ஒரு பறவையின்
அந்திச்சொல்லுக்கு
கானகம் எப்படி
சிலிர்த்துக்கொண்டது
கடல் கிடக்கும்
பெருமீன் ஒன்றின்
சோகத்திற்கு
வானம் எப்படி உடைந்தது
ஆதியில்
சுடர் எங்ஙனம்
ஒளிரத்துவங்கியது
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக