ஞாயிறு, 8 டிசம்பர், 2024

இப்பெருக்கு
எப்போது
ஓயப்போகிறது
ஒரு இடறலில்
வானம் எப்படி
திறந்துகொண்டது
ஒரு பறவையின்
அந்திச்சொல்லுக்கு
கானகம் எப்படி
சிலிர்த்துக்கொண்டது
கடல் கிடக்கும்
பெருமீன் ஒன்றின்
சோகத்திற்கு
வானம் எப்படி உடைந்தது
ஆதியில்
சுடர் எங்ஙனம்
ஒளிரத்துவங்கியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...