ஒரு மௌனமோ
கனிதலோநிகழாத நாள்
கண்ணீரோ
ஒரு தொடுகையோ
நிகழாத நாள்
மலரைக் காணுதலோ
மழையில் பூரித்தலோ
நிகழாத நாள்
இந்நாளை
ஒரு நிகழாத நாளாக
ஆக்கமுடியாது
அதன் நிகழ்வுகளை
மாற்றவும் முடியாது
காலத்தை அவ்விதமாக
இந்நாளில் நம் ஒரு நாள்
சந்திக்கையில்
ஒரு பாறையைப்போல்
கிடக்கும் நாளில்
வெறுமனே வருகைக் கையெழுத்திட்டு
இல்லம் திரும்புங்கள்
பேரேடு
நிகழும் நாளுக்கான கையெழுத்தையும்
நிகழா நாளுக்கான கையெழுத்தையும்
ஒன்றே போல் ஏந்தியுள்ளதை
நம் மனம் ஒரு போதும்
ஏற்கப்போவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக