கிளை அலுங்கவில்லை
நீங்கும் சிறு குருவியின்இறகு பட்டு
இலையொன்று நலுங்கியது விட்டு
வேறெந்த அசைவுமில்லை
அத்தனை மென்மையில்தான்
துளி மகரந்தம்
சிறகு கொண்டெழுந்தது
மெல்லிய பறவையொலிக்கிடையில்
வானத்தில்
விருட்சங்கள் பறக்கின்றன
இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும் பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்கொண்டுவிட்ட அகத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக