இன்று மாலை
வானம் மஞ்சளாய் இருந்ததும்மேற்கில் நெருப்பின்
பிழம்பாய் கொதித்ததையும்
வரிசைக்கட்டி வானில் நடந்த
பறவைகளையும்
யாரும் பார்க்கவில்லை
சொல்லாமல் கொல்லாமல்
கண்வழி உள் நுழைந்த
இம்மாலையை
வாவென்று சொல்ல நாவெழாமல்
நின்றிருந்தேன்
விடைபெற்றபோது
மேற்கும் அறியாமல்
புள்ளும் அறியாமல்
ஏன் மஞ்சளும் கூட அறியாமல்
துளி எடுத்து
சிற்றகலில்
என் சிற்றில்லில்
சுடராய் வரைந்துகொண்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக