வனமெங்கும் நிறைந்த
வசந்ததின் மலர்களாய் நின்றதுமென்மையாய் மிதந்து வந்து
நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது
அசையா வேர்களில்
தியானித்திருந்தது
வான்தொட எழுந்த
பெருவிருட்சத்தில்
நடனமாய் இருந்தது
பொழுதணையும் வேளையில்
நாளெல்லாம்வெட்டிய
விறகுகளை சேர்த்துக்கட்டி
பரிசலில் நதி கடக்க
இருளில் இருளாய்
காட்சியானது வேழம்
வனமென ஆகிவந்த
துளியாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக