சனி, 25 ஜனவரி, 2025

தன்னைத் தான்

 ஒரு கோடி வருடமாய்

வானத்தை அளக்கிறது புள்

அதுதான் சொன்னது

'வானம் அளப்பதற்கானதல்ல

பார்ப்பதற்கானது

ஒவ்வொரு மூச்சும்

வானத்தின் அழைப்பு

சுவர் உடைந்தால்

அகம் வானாகும்' என்று

பின்

'அதுவரை வானத்தைப் பார்த்திரு

தன் நிறத்தின் ஜாலங்களைக்

தான் காணத்தான்

கோடான கோடி கண்களைப் பெருக்கியுள்ளது

இந்நிலமெல்லாம்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...