சனி, 25 ஜனவரி, 2025

தன்னைத் தான்

 ஒரு கோடி வருடமாய்

வானத்தை அளக்கிறது புள்

அதுதான் சொன்னது

'வானம் அளப்பதற்கானதல்ல

பார்ப்பதற்கானது

ஒவ்வொரு மூச்சும்

வானத்தின் அழைப்பு

சுவர் உடைந்தால்

அகம் வானாகும்' என்று

பின்

'அதுவரை வானத்தைப் பார்த்திரு

தன் நிறத்தின் ஜாலங்களைக்

தான் காணத்தான்

கோடான கோடி கண்களைப் பெருக்கியுள்ளது

இந்நிலமெல்லாம்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...