ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மாபெரும் வண்ணத்துப்பூச்சி

ஒன்று
வனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது

எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது

வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்

வானத்திலோ
இருமையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?