நூறாவது வெற்றியை
அளித்தாய்
உலகுடனான என் பேரங்கள்
முடிவதேயில்லை
மேலும் மேலும்
எனும் புரவி பூட்டி
ஒரு பெரும் படையாய்
எங்களை நாங்களே
முந்திச்செல்கிறோம்
ஆசையின் குழம்படியதிர்வில்
உன் மலர்கள்
லேசாக நலுங்குகின்றன
மற்றபடிக்கு அவை
வானையே
பார்த்துள்ளன
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக