நூறாவது வெற்றியை
அளித்தாய்
உலகுடனான என் பேரங்கள்
முடிவதேயில்லை
மேலும் மேலும்
எனும் புரவி பூட்டி
ஒரு பெரும் படையாய்
எங்களை நாங்களே
முந்திச்செல்கிறோம்
ஆசையின் குழம்படியதிர்வில்
உன் மலர்கள்
லேசாக நலுங்குகின்றன
மற்றபடிக்கு அவை
வானையே
பார்த்துள்ளன
நீ ஏற்றிய அகலில் அதன் செதில் ஒளிர்கிறது ஒரு நாள் நீ இட்ட கோலத்தில் கோடுகளோடு வளைந்து கிடந்தது இமையாக் கண்களும் ஓயா துடிநாவும் என் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக