ஞாயிறு, 5 ஜனவரி, 2025

கணங்களில் தவழ்தல்

நண்பா
நான்‌ மிகம்
சோர்வுற்றிருக்கிறேன்
ஏதிந்தப் புலம்பலென
முகம்சுழிக்காதே
மோனம் என்னில்
நீடிப்பதில்லை
ஒரு கணம் இலகி நழுவி
ஒரு கணம் கிடந்து
பின் தான் தான்
எனக் கவிகிறது அகம்
இசைக்கு நொடிக்கணம்‌ நீராகி
பின் திடப்பொருளாய் கிடக்கும்
அகத்தை தொட்டுப்பார்ர்கிறேன்
அந்தியின் பறவையொன்று
சிறகசைத்து சிறகசைத்து
பின் புள்ளியாய் நிலைத்து
கரைந்தழிகிறது நண்பா
வானம் அகத்தின் கதவுகளை
திறந்து பார்த்துவிட்டு
பின் இருக அடைத்துவிட்டுச்
சென்றுவிடும் இரவில்
நான் மிகவும்
சோர்வுற்றுள்ளேன்
என் நண்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...