புதன், 8 ஜனவரி, 2025

லாயமெல்லாம்
வால்சுழற்றலும்
பர்க்கடித்தலும்
நீரருந்தி
எழும் தாடையின்
நீர்வழிவுமான
ஒரு பகலில்
நாயொன்று முகர்ந்து வந்து
ஒவ்வொரு குதிரையாய்
கண்ணோட்டமிடுகிறது
இத்தனைக் குதிரை
எத்தனை தூரம்
எத்தனை வேகம்
ஓடும்?
தூரம் லாயத்துக்குள்
நிற்கிறது
வேகம் சலனமின்றிக்
கிடக்கிறது
அசையும் முன் அசைவு
என்னவாக உள்ளது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வனமெங்கும்  நிறைந்த வசந்ததின் மலர்களாய் நின்றது மென்மையாய் மிதந்து வந்து நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது அசையா வேர்களில் தியானித்திருந்த...