வியாழன், 9 ஜனவரி, 2025

கொல்லும் இரவு.
காதலின் உன்மத்ததில்
கிடக்கும்
ஏரி.
இத்தனை சலனமற்றதாக்கிய
காதல் எங்கே பிறந்தது?
உயிரின் ஆவி எழும்
நீர்வெளிக்குள்
குதித்தேன்
ஆழமெல்லாம் சலியத்
தேடியானபின்
ஏரிக்குமேல்
வானத்தில் ஒளிர்ந்தது
காதலின் மைய ஊற்று.
அதுதான் பெருக்கிற்று
கானகத்தின் இருள் உச்சாடனத்தை
நிலவின் செதில் ஒளிரும்
சர்ப்பங்களை பித்து கொள்ளச்
செய்தது அதுதான்.
மலர்கள் உடலோய்ந்துவிட்டன.
மானுடர் கனவுகளில்
எழுகிறது அதன்
ஓயா அழைப்பு.
கொல்லும் இரவிது.
மேலும் சலனமற்ற கனவினால்
துடிக்கின்றன உடல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...