ஞாயிறு, 5 ஜனவரி, 2025

முன்பென்ன

எல்லாரிடமும்
கேட்டாயிற்று
பெருவெடிப்பைபோல்
நிகழ்வதாம்
தாகத்தைக்கூட நாம்
உருவாக்கிகொள்ள
முடியாதாம்
இனி ஒரு சொல்லும்
வேண்டாம்
ஒலியற்ற‌ ஆழம் சென்று
படைத்ததிடம்
கேட்கப்போகிறேன்
ஏன் என்று?
பெருவெடிப்பைப்போல்
இது ஒரு
சிறுவெடிப்பென்றால்?
வெடித்துச் சிதறியவற்றை
ஒருக்கி ஒன்றாக்கினால்
என்ன வரும்?
லயத்திற்கு முன்னான
லயம்தான் எப்படியானது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும்‌ பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்‌கொண்டுவிட்ட அகத்தை