சனி, 25 ஜனவரி, 2025

முதல் சொல்

இந்த அதிகாலையில்
பறவைகள் எழவில்லை
வனத்தின் மீது கவிந்திருக்கும்
மூடுபனியின் கதவுகளை
மெல்லத் தட்டுகிறேன்
காலை மெல்லக் கலைகிறது
ஈரம் உரைந்து கிடக்கும்
இலையில்
வெளியின் நீள நீளமான நாளங்களில்
ஓடிவந்த
மஞ்சளின் ஆன்மம் மெல்ல
வண்ணமிடுகிறது
இம்மாபெரும் வனத்தை
அசைக்கப்போகும் முதல் புள்ளே
நீ வாழும் தொன்மையான விருட்சத்தின் கீழ் 
காத்துள்ளேன்
காலமும் வெளியும்
உன் வழி அருளும்
முதல் சொல்லை வேண்டி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நிலவொளி இலைகளின் வழி உடைந்து சிதறிக் கிடக்கிறது இலையசைந்தால் நிலவு அசையும் மாயம் நிகழ்கிறது இந்த இரவின் ஆன்மம் பறவைக்குரலில் ஏறி வந்த...