கானுறை புள்குரல்
உடைத்து விட்டதுஏக்கத்தின் மதகினை
சர்ப்பமும் மலரும் அலைநெளியும்
உன் வெளிக்குள்
நிற்கிறேன்
இவ்வுடல் பாரம்
இவ்வுடல் பாரம்
பிரிவு செய்தது இத்தனை
கனத்தை
உன் கோடி மலரில்
ஒன்றுதிர்ந்தால்
தீர்ந்து போகும்
வெறும் தாகமாய் நிற்கும்
இவ்வாழ்வு
நிலவொளி இலைகளின் வழி உடைந்து சிதறிக் கிடக்கிறது இலையசைந்தால் நிலவு அசையும் மாயம் நிகழ்கிறது இந்த இரவின் ஆன்மம் பறவைக்குரலில் ஏறி வந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக