கானுறை புள்குரல்
உடைத்து விட்டதுஏக்கத்தின் மதகினை
சர்ப்பமும் மலரும் அலைநெளியும்
உன் வெளிக்குள்
நிற்கிறேன்
இவ்வுடல் பாரம்
இவ்வுடல் பாரம்
பிரிவு செய்தது இத்தனை
கனத்தை
உன் கோடி மலரில்
ஒன்றுதிர்ந்தால்
தீர்ந்து போகும்
வெறும் தாகமாய் நிற்கும்
இவ்வாழ்வு
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக