வியாழன், 9 ஜனவரி, 2025

கானுறை புள்குரல்
உடைத்து விட்டது
ஏக்கத்தின் மதகினை
சர்ப்பமும் மலரும் அலைநெளியும்
உன் வெளிக்குள்
நிற்கிறேன்
இவ்வுடல் பாரம்
இவ்வுடல் பாரம்
பிரிவு செய்தது இத்தனை
கனத்தை
உன் கோடி மலரில்
ஒன்றுதிர்ந்தால்
தீர்ந்து போகும்
வெறும் தாகமாய் நிற்கும்
இவ்வாழ்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?