Saturday, July 11, 2020

உயிரழிதல்

ஒளியற்ற
இவ்விரவில்
நீ
தீப்பெட்டியை
உரசுகிறாய்
கைகால் உதைத்து
உடல்சிலுப்பி
உன் கைகளில்
உயிர்பெறுகிறது
சிறிய காலை

உதயத்தின் மலைவிளிம்பென
மலையில் ஒளிரும்
விளக்கென
உன் மூக்குத்தி

சற்றும் அசையாதே
சற்றும் உன் கைகளை
உயர்த்தாதே
இவ்வளவுதான்
இந்த உயிர்
கடக்கும் தூரம்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...