சனி, 11 ஜூலை, 2020

உயிரழிதல்

ஒளியற்ற
இவ்விரவில்
நீ
தீப்பெட்டியை
உரசுகிறாய்
கைகால் உதைத்து
உடல்சிலுப்பி
உன் கைகளில்
உயிர்பெறுகிறது
சிறிய காலை

உதயத்தின் மலைவிளிம்பென
மலையில் ஒளிரும்
விளக்கென
உன் மூக்குத்தி

சற்றும் அசையாதே
சற்றும் உன் கைகளை
உயர்த்தாதே
இவ்வளவுதான்
இந்த உயிர்
கடக்கும் தூரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...