ஞாயிறு, 12 ஜூலை, 2020

கோடிப் பாதம்பதித்து
சிகையின் இழைகள்
ஆடித்திரிய
மண்மேல்
ஆரோகணித்தது

ஆதிப்பெருவெளியின்
தீராக் கணமொன்றில்
கணம் கூடிக் கனத்த
கூரையென்றான
இலையொன்று
இளகிற்று
சிறுகூட்டின்
பறவைகளுக்கு
ஸபரிசமானது
மழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் யார்?

சொல்‌ பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...