Sunday, July 12, 2020

கோடிப் பாதம்பதித்து
சிகையின் இழைகள்
ஆடித்திரிய
மண்மேல்
ஆரோகணித்தது

ஆதிப்பெருவெளியின்
தீராக் கணமொன்றில்
கணம் கூடிக் கனத்த
கூரையென்றான
இலையொன்று
இளகிற்று
சிறுகூட்டின்
பறவைகளுக்கு
ஸபரிசமானது
மழை

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...