Wednesday, July 22, 2020

ஆயிரம் ஒளிகளை
ஆயிரம் பட்டாம்பூச்சிகளென
சுமந்து
நிற்கும்
மலர்வெளி மலையில்
மானொன்று
நீர் அருந்த
சிற்றோடை
நோக்கிச் செல்கிறது
மலையின் ஆழ் கண்கள்
கண்டுகொண்டே இருக்கிறது
தன்னில் பெருகும்
ஆயிரம்
ஆயிரம்
உயிர்நுட்பஙகளை

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...