புதன், 22 ஜூலை, 2020

ஆயிரம் ஒளிகளை
ஆயிரம் பட்டாம்பூச்சிகளென
சுமந்து
நிற்கும்
மலர்வெளி மலையில்
மானொன்று
நீர் அருந்த
சிற்றோடை
நோக்கிச் செல்கிறது
மலையின் ஆழ் கண்கள்
கண்டுகொண்டே இருக்கிறது
தன்னில் பெருகும்
ஆயிரம்
ஆயிரம்
உயிர்நுட்பஙகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?