Friday, July 17, 2020

இரவு
தன் கைகளால்
கடைசி ஒளியையும்
துடைக்கும்
அம்மலையில்
ஒரு கிரகமன
தனித்து
கான் மிதக்கும் கோயில்
அகல் ஏற்றி
கண் மூடி அமர்கிறார்
காற்றும் இலைகளும்
நிலவும் கானும்
மட்டுமே பேசின
அங்கு

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...