Monday, July 6, 2020

அன்பின் பொருட்டு

கூத்தாடி அலைவதும்
கூடிச் சிரிப்பதும்
தோள் பற்றி அழுவதும்
கண்ணீருடன் கரம் விடுப்பதும்
மற்றவர் நினைவில் உழல்வதும்
தேடி தூரங்கள் செல்வதும்
பரிசுகள் பகிர்வதும்
முத்தங்களில் திளைப்பதும்
ஊடலின் எல்லை சோதிப்பதும்
கரம் குலுக்கிப் பிரிவதும்
காலத்தை வெறுப்பதும்
விதியை சபிப்பதும்
இறையை நினைப்பதும்
சிரிப்பதும்
அழுவதும்
காமுறுவதும்
சினப்பதும்
குமைவதும்
உழல்வதும்
கரைவதும்
திடமாவதும்
நெகிழ்வதும்
உடைதலும்
விழுதலும்
மீண்டெழுதலும்
நிறைவதும்
அழிவதும்
எல்லாம்
எல்லாம்
எல்லாம்


No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...