திங்கள், 13 ஜூலை, 2020

மழையின்
மௌனம்
ஆயிரம் காலகளில்
நிலமெங்கும்
நடக்கிறது

கோடையில் பிரவேசித்த
பசும்மழையில்
பாறைகள்
ஊறிக்கிடக்கின்றன

ஒரு சுடரை
ஏற்றி
அதனருகிலேயே
களிக்கிறேன்
இந்த முழு
மழைக்காலத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?