Monday, July 20, 2020

தூரத்து மலையின்
எருதின்
தடங்கள்
மட்டும் கிடக்கும்
சரிவில்
பூத்திருக்கிறது
மலர்கள்
புலரியின் தங்கப்பறவைகளும்
அந்திப்பறவையின் ஆயிரம்
வண்ணங்களும்
காலம்காலமாய்
பறக்கிறது
மலரின்
தனிநிலத்தின் மேல்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...