Saturday, July 18, 2020

மலையின்
ஆழுறக்கம்
கலைந்து
மெல்லக்
கண் திறக்க
ஆயிரம் பறவைகளுடன்
எழுந்தது சூரியன்
மொத்த மலைகளும்
உச்சாடன ஒளியுடன்
சலனமின்றி அசைகிறது
இருளென வழிந்த
மலைநதி
இடறி விழுந்தது
கதிரின் சுழிக்குள்
நகரும் பிரம்மாண்டங்களின்
முன்
கூப்பி நிற்க
இருப்பது
இரு கைகள் மட்டும்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...