சனி, 18 ஜூலை, 2020

மலையின்
ஆழுறக்கம்
கலைந்து
மெல்லக்
கண் திறக்க
ஆயிரம் பறவைகளுடன்
எழுந்தது சூரியன்
மொத்த மலைகளும்
உச்சாடன ஒளியுடன்
சலனமின்றி அசைகிறது
இருளென வழிந்த
மலைநதி
இடறி விழுந்தது
கதிரின் சுழிக்குள்
நகரும் பிரம்மாண்டங்களின்
முன்
கூப்பி நிற்க
இருப்பது
இரு கைகள் மட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ ஏற்றிய அகலில் அதன் செதில் ஒளிர்கிறது ஒரு நாள் நீ இட்ட கோலத்தில் கோடுகளோடு வளைந்து கிடந்தது இமையாக் கண்களும் ஓயா துடிநாவும் என்‌ க...