Sunday, July 19, 2020

மலையெழுந்து
விண்ணோக்கி
சுட்டும் விரலென
மலையுச்சி மரம்
உடைந்து பிளந்து
எழுந்து விரிந்து
சரிந்து
ஆழ்ந்து
விரிந்திருக்கும்
மலைப்பெருநிலம்
திறந்த வாயெனப்
பள்ளத்தாக்குகள்
பெரு மிருகமென
பாறைகள்
யாரும் நடாத விதைகள்
ஆயிரம் ஆயிரம்
விருட்சங்களாய்
தொடுக்காத மலர்கள்
சரம் சரம் கோடிகளாய்
நிலவெழ
பூமியின் மூடிய கண்கள்
உடையாத தனிமை
அலையாத அமைதி
சலனம்
பின்
சாந்தம்
ஓம் ஓம் ஓம்



No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...