சனி, 13 நவம்பர், 2021

 நீ அலுங்காத போது
காற்று அசைக்கிறது
கொலுசின் சிறுமணிகளை

காற்று அசையாத போது
மெலும் மென்மையாய்
அசைக்கிறது
உன் நடை

அச்சிற்றொலியின்
தூண்டில் வீச்சுக்கு
மனம்
எழுகிறது
ஆழ் கடலில்
நீண்டு தொடும்
கதிர்க்கரங்கள்
நோக்கி எழும்
கனவுக் குமிழிகளாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...