Saturday, November 13, 2021

 நீ அலுங்காத போது
காற்று அசைக்கிறது
கொலுசின் சிறுமணிகளை

காற்று அசையாத போது
மெலும் மென்மையாய்
அசைக்கிறது
உன் நடை

அச்சிற்றொலியின்
தூண்டில் வீச்சுக்கு
மனம்
எழுகிறது
ஆழ் கடலில்
நீண்டு தொடும்
கதிர்க்கரங்கள்
நோக்கி எழும்
கனவுக் குமிழிகளாய்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...