சனி, 13 நவம்பர், 2021

 சிறுமியாய்
கன்னியாய்
பெண்ணாய்
பின் முதியவளாய்
நாள் தவறாது
பூப் பரித்து
சாமிக்கு இட்டவள்
விண்ணுலக வாயில் நின்று
பூமி நோக்கினாள்
உலகை சூழ்ந்த நீர்
இதழாகவும்
நடுவில் அமைந்த
நிலம் மகரந்தச்செரிவெனவும்
ஒரு மலரைக் கண்டாள்
பின் குதிங்கால் பட்டு
கொலுசொலிக்க
உள் சென்றாள்
விண்ணுலகின்
தன் முதல்நாள்
அன்றாடங்களுக்குள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?