Saturday, November 13, 2021

தத்வமஸி

 பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி
ஒற்றைப் புள்ளியே பிரபஞ்சம்

கடலில் ஒரு துளி
ஒற்றைத் துளியே கடல்

காட்டில்‌ஒரு மலர்
காடே ஒரு மலர்

மலையில் சிறு கூழாங்கல்
கூழாங்கல்லே ஒரு மலை

வானில் ஒரு புள்
வானமே ஒரு புள்

இச்சொல் அடுக்கில்

நான் எது
எது நான்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...