பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி
ஒற்றைப் புள்ளியே பிரபஞ்சம்கடலில் ஒரு துளி
ஒற்றைத் துளியே கடல்
காட்டில்ஒரு மலர்
காடே ஒரு மலர்
மலையில் சிறு கூழாங்கல்
கூழாங்கல்லே ஒரு மலை
வானில் ஒரு புள்
வானமே ஒரு புள்
இச்சொல் அடுக்கில்
நான் எது
எது நான்
அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...
No comments:
Post a Comment