பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி
ஒற்றைப் புள்ளியே பிரபஞ்சம்கடலில் ஒரு துளி
ஒற்றைத் துளியே கடல்
காட்டில்ஒரு மலர்
காடே ஒரு மலர்
மலையில் சிறு கூழாங்கல்
கூழாங்கல்லே ஒரு மலை
வானில் ஒரு புள்
வானமே ஒரு புள்
இச்சொல் அடுக்கில்
நான் எது
எது நான்
முட்கள் இதென்றும் மலர்கள் இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக