இவ்வந்திக்குள்
கடல் நோக்கிச் செல்லும்பறவை
கடல் மூழ்கும்
சூரியனின்
செம்மை சூடிற்று
அலைசரிகை
எங்கும்
செம்மையொளி
அலைத்துமிகள்
தீத்துளியென ஒளிர்ந்து
பின் நீரானது
கரை நிற்கும்
அவள் தீச்சுடரென
அம்மாலை
பற்றி எரிந்தது
ரம்மியமான செஞ்சுடரென
அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...
No comments:
Post a Comment