திங்கள், 22 நவம்பர், 2021

இவ்வந்திக்குள்
கடல் நோக்கிச் செல்லும்
பறவை
கடல் மூழ்கும்
சூரியனின்
செம்மை சூடிற்று
அலைசரிகை
எங்கும்
செம்மையொளி
அலைத்துமிகள்
தீத்துளியென ஒளிர்ந்து
பின் நீரானது
கரை நிற்கும்
அவள் தீச்சுடரென
அம்மாலை
பற்றி எரிந்தது
ரம்மியமான செஞ்சுடரென

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...