Saturday, November 13, 2021

மாலைச் சிறு நடையில்
சற்று நின்றவள்
ஸ்தம்பித்துப்போய்ச்
சொன்னால்
"வானம் என
ஒன்று இல்லையல்லவா"
"ஆம்"
"நாம் காண்பது நிறம்
மட்டுமல்லவா"
"ஆம்"
"நிறம் என்பது
கண்கள் காண்பது அல்லவா"
"ஆம்"
"கண்கள் இல்லாவிடில்
இவையனைத்தும்
எவ்விதமோ
இருக்கும் அல்லவா"
"ஆம்"
"நாம் காண்பது
நம் உலகமல்லவா
நாம்‌‌ காண்பது
ஒரு உலகம் மட்டுமல்லவா"
"ஆம் கண்ணே
இல்லாத வானின்
கீழ் நாம் நம்
கால்வேண்டும்
சிறு நிலத்தில்
இச்சிறுடலோடு
இக்கண்கள் எட்டித்
தொடும் காட்சிகளோடு
பல்லாயிரம் கனவுகளோடு
காதல்கொண்டுள்ளோம்"

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...