சனி, 13 நவம்பர், 2021

 வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணமானது
பூக்களின் வண்ணம்
பருகி என்றாள்

பின்
கூந்தல் காற்றாடத் திரும்பி
வண்ணப்பூக்கள்
வண்ணமானது
வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணம்
உண்டு
என்று சிரித்தாள்

ஆம்
வண்ணங்கள் பறப்பவை
வண்ணங்கள் மலர்பவை
வண்ணங்கள் சிரிப்பவை
வண்ணங்கள் வண்ணமயமானதன்
கதையை மட்டும்
நாம் சொல்லிக்கொண்டே இருப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...