Saturday, November 13, 2021

 வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணமானது
பூக்களின் வண்ணம்
பருகி என்றாள்

பின்
கூந்தல் காற்றாடத் திரும்பி
வண்ணப்பூக்கள்
வண்ணமானது
வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணம்
உண்டு
என்று சிரித்தாள்

ஆம்
வண்ணங்கள் பறப்பவை
வண்ணங்கள் மலர்பவை
வண்ணங்கள் சிரிப்பவை
வண்ணங்கள் வண்ணமயமானதன்
கதையை மட்டும்
நாம் சொல்லிக்கொண்டே இருப்போம்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...