சனி, 13 நவம்பர், 2021

 எட்டிப் பூப்பரிக்கும்
சிங்காரப் பெண்ணே
நுணிக்கால் பாதம்
நிலம்விட்டெழவில்லை
இறக்கைகளும்
முளைக்கவில்லை
நீண்ட உன் கைகளில்
சரிந்து மேல்விழுந்து ஒலிக்கும்
வளையலன்றி வேறு
இசையெழவுமில்லை
ஆனாலும்
விண் நுன் கைகள்
சமைத்த பூக்கள்
உன் இத்தனை அருகாமைக்கும்
கிளை நீங்காத குருவி
இலை தன் உள்ளங்கை ஏந்தி
நடன பாவனையில் உன் மேல்
உதிர்க்கும் நீர்த்துளிகள்
மேலும்‌ மேலும்
நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?