சனி, 13 நவம்பர், 2021

 எட்டிப் பூப்பரிக்கும்
சிங்காரப் பெண்ணே
நுணிக்கால் பாதம்
நிலம்விட்டெழவில்லை
இறக்கைகளும்
முளைக்கவில்லை
நீண்ட உன் கைகளில்
சரிந்து மேல்விழுந்து ஒலிக்கும்
வளையலன்றி வேறு
இசையெழவுமில்லை
ஆனாலும்
விண் நுன் கைகள்
சமைத்த பூக்கள்
உன் இத்தனை அருகாமைக்கும்
கிளை நீங்காத குருவி
இலை தன் உள்ளங்கை ஏந்தி
நடன பாவனையில் உன் மேல்
உதிர்க்கும் நீர்த்துளிகள்
மேலும்‌ மேலும்
நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...