திங்கள், 15 ஜூன், 2020

துவங்கிய
கோலத்தை
புள்ளிகளுடன்
நிறுத்திவிட்டு
உள்சென்றாய்

கோலப்புள்ளிகளும்
புல்நுனி அமர்ந்த
பனிப்புள்ளிகளும்
ஒன்றையொன்று
உசாவியறிந்தன

பின் கதைத்தன
தன்னைப்
படைத்த
கரங்களைப்பற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...