திங்கள், 15 ஜூன், 2020

துவங்கிய
கோலத்தை
புள்ளிகளுடன்
நிறுத்திவிட்டு
உள்சென்றாய்

கோலப்புள்ளிகளும்
புல்நுனி அமர்ந்த
பனிப்புள்ளிகளும்
ஒன்றையொன்று
உசாவியறிந்தன

பின் கதைத்தன
தன்னைப்
படைத்த
கரங்களைப்பற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?