ஞாயிறு, 21 ஜூன், 2020

நீ இல்லாத தூரம்
இப்புல்வெளியின் விரிவு
ஏரிக் கனவுகளின் தவிப்பு
மாட்டின் மணிச்சத்தம்
வெகு தூரம் உலவும் அந்தியின் மௌனம்
காற்று தவித்தலையும் ஓசை
மரங்களின் பெருமூச்சில் விழியமையும் இலைகளின் விண்நோக்கு
இருளிலாழும் மலைகளின் நிழல்
அந்தியின் இறுதி இசையாய்
புள் ஒன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வனமெங்கும்  நிறைந்த வசந்ததின் மலர்களாய் நின்றது மென்மையாய் மிதந்து வந்து நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது அசையா வேர்களில் தியானித்திருந்த...