Sunday, June 21, 2020

நீ இல்லாத தூரம்
இப்புல்வெளியின் விரிவு
ஏரிக் கனவுகளின் தவிப்பு
மாட்டின் மணிச்சத்தம்
வெகு தூரம் உலவும் அந்தியின் மௌனம்
காற்று தவித்தலையும் ஓசை
மரங்களின் பெருமூச்சில் விழியமையும் இலைகளின் விண்நோக்கு
இருளிலாழும் மலைகளின் நிழல்
அந்தியின் இறுதி இசையாய்
புள் ஒன்று

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...