Wednesday, June 24, 2020

உச்சி மரத்தின்
நுனியில்
தளிரென
ஒரு புள்
அலகேந்திய
பழமென
நிலவு

கிரகங்களை
அலகேந்திப்
பறக்கும்
சிறகுகளின்
காற்று மோத
தாவிற்று
கிரகங்கள்
மிதக்கும் கடலில்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...