சனி, 8 பிப்ரவரி, 2020

சிறுபொழுது

அந்தியும்
புலரியும்
இரவும்
தன் வண்ணங்களை
பரிமாறிக்கொண்டிருக்கும்
இப்பெரும்பொழுதுகளில்
என் சிறுபொழுதினை
என் சிற்றில்லத்தில்
சிறு தோட்டம் செய்து
மலர் கொண்டு
மலர் தொடுத்து
விண்ணின் வண்ணங்களே
மலராகி வந்ததாய்
கதைத்து
மலர்கள்
கண்ணீர் விடுகையிலும்
மணம் வீசுவதை
ஒரு மகத்தான உண்மையாய்க்
கண்டு
மலர்கள் தேன் கொள்வது
மலர்களின் விழைவாலல்ல
அவை விண்ணுக்கு
ஒப்புக் கொடுத்ததன் விளைவென்று
உணர்ந்து
மலர் அசைய
மலரோடு அசைந்து
ஒரு மலராவதிலேயே
கழித்துவிடப்போகிறேன்
என் சிறுபொழுதினை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?