புதன், 17 ஜூன், 2020

வேர்கள்
அவ்வளவு
உறுதியாய்
நிலம் பற்றியிழுத்தும்
மலையுச்சி
மரங்கள்
விண்ணோக்கியே
கைநீட்டுகின்றன

அலையும்
காற்று அறியும்
மரநுனிவிரலின்
ஓயா
தாகத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...