திங்கள், 21 அக்டோபர், 2019

இவ்வளவு வேகம்
வேண்டாமே

அன்று பிறந்த
நாய்க்குட்டிகளை
நீங்கள்
இடறிவிடக்கூடும்

சிறு கண்களென
பூத்திருக்கும்
மலர்களை
பார்க்காமல்
கடந்து விட க் கூடு ம்

பாரமெல்லாம்
மறந்து
சற்று நாணும்
சாலையோரப்
பெண்ணை
பார்க்காமலே
போய்விட்டால்?

வானம்
ஆசையாய்
மழையால்
பூமியை அள்ள வர
நீங்கள்
குடையுடன்
வேகமாய் நடையைப்போட்டால்
அவை
கோபிக்காதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...