புதன், 1 மே, 2019

உன் கழுத்தில்
துடிக்கும்
இதயத்தின்
மென்குமிழிகளுடன்

ஈரமான
மலரை ஒற்றியெடுப்பது
போன்ற உன்
முத்தங்களுடன்

மழையைஅஞ்சி
மழையின்றி
மழைக்கனவுகளுடன்
குகைகளின் ஆழத்திற்குள் சுருண்டுவாழும்
உயிர்களின் பிரதேசத்திற்குள்

ஏன் இவ்வளவு
உறுதியாய்
வந்து கொடிருக்கிறாய்

மேகமற்ற பாலைமண்
வெயிலிடம்  ஒப்படைத்து
நொடிகளை அலைந்துகொண்டு
காத்திருக்க்கும்
புழுதியின் நிலத்தில்
சிறுகோடெனெ
உன் உருவம்
நலுங்கிறது

உடன் நடந்து
வருகிறது
நதிப்பசுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...